மோடிக்கு ஜெ. எழுதும் கடிதம் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு தான் செல்கின்றன: சு.சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு செல்வதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சாமி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

Jaya's letters to Modi goes to trash bin: Swamy

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதில் முதல்வர் ஜெயலலிதா கின்னஸ் சாதனையே படைத்துவிட்டார். அவர் எழுதும் கடிதங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு தான் செல்கின்றன.

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக அவர் மோடிக்கு எழுதிய கடிதமும் குப்பைத் தொட்டிக்கு தான் செல்லும். மேலும் அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடிதம் எழுதுகிறாராம் என்றார்.

மருத்துவ நுழைவுத் தேர்வை ஓராண்டுக்கு ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா நேற்று முன்தினம் மோடிக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+