எழுத்தாளர் சோ மகன் திருமணம்: பரிசுப் பொருள் அனுப்பினார் ஜெ.
சென்னை: துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ ராமசாமியின் மகன் திருமணவிழாவில் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சோவின் மகன் ராஜீவாசன் என்ற ஸ்ரீராமுக்கும், லட்சுமி நாராயணன்-ராஜேஸ்வரி தம்பதியின் மகள் சித்ரா வுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் பாலவாக்கம் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள சோ பண்ணை வீட்டில் ஐதிக முறைப்படி இன்று நடைபெற்றது.
மணமக்களை பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நேரில் வாழ்த்தினார். மேலும் டைரக்டர்கள் பாலசந்தர், மகேந்திரன், நடிகர் சிவகுமார், ரம்யாகிருஷ்ணன், கிரேசி மோகன் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி இன்னசன்ட் திவ்யா மணமக்களுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மணவிழாவுக்கு வந்தவர்களை மணமகனின் பெற்றோர் சோ-சவுந்தரா, மணமகளின் பெற்றோர் லட்சுமி நாராயணன்- ராஜேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications