47 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மோடிக்கு ஜெ. கடிதம்! நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்!!

மத்தியில் பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் தமிழக மீனவர்களை கைது செய்வது; பின்னர் விடுவிப்பது என்ற நடவடிக்கையை தொடர் வாடிக்கையாக வைத்துள்ளது இலங்கை அரசு. இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 47 மீனவர்களை தற்போது இலங்கை கைது செய்துள்ளது.
அத்துடன் தமிழக மீனவர்களின் 10 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டுபோயுள்ளது இலங்கை கடற்படை. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில், பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வருகின்றனர்.
அப்படியான நிலையில் இலங்கையால் 47 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;
அத்துடன் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications