ஜூன் 30 ல் ஸ்ரீரங்கம் செல்கிறார் ஜெயலலிதா.. நலப் பணிகளைத் துவக்கி வைக்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நலத்திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக ஜூன் 30ம் தேதி திங்கட்கிழமை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அரசுமுறை பயணமாக வருகிற 30 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சியில் உள்ள தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கம் செல்ல உள்ளார்.
அன்றைய தினம் அங்கு நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.
மேலும் அவ்விழாவில் நலிந்த பிரிவினர் மற்றும் ஏழை எளியோருக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேருரை ஆற்ற உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications