தமிழகத்தில் நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்கள்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: சென்னை: சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள 10 திட்டங்களை உடனே நிறைவேற்றக் கோரி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகம் எதி்ர்பார்க்கும் ரயில்வே திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 20 தமிழக திட்டங்கள் பலமுறை பட்ஜெட்டில் அறிவித்தும் நிறைவேற்றப்படவில்லை என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தின் தொலைநோக்குத் திட்டம் 2023'ல் அறிவிக்கப்பட்டுள்ள 10 முக்கியமான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
சென்னை- தூத்துக்குடி இடையேயான பிரத்யேக சரக்கு வாகனப் பாதை, சென்னை-மதுரை-கன்னியாகுமாரி இடையேயான விரைவான பயணிகள் ரயில், மதுரை- கோயம்புத்தூர் இடையே விரைவான பயணிகள் ரயில் ஆகிய திட்டங்களை ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு அமைப்பு ஒன்றை உருவாக்காவும் அரசு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் சிறப்பு அமைப்பை உருவாக்குவதற்காக மத்திய அரசுடன் மாநில அரசுகள் செய்யும் ஒப்பந்தத்திற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகள் மாநில அரசுக்கு ஆதரவாக இல்லை.
ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு இடங்களை வழங்கும் போது அதற்கு ஈடாக பணமாகவோ அல்லது ரயில்வே அல்லது மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்களையோ மாநில அரசுக்கு வழங்க வேண்டும். மேலும், திட்டங்களை செயல்படுத்தும் சிறப்பு அமைப்பில் மாநில அரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications