எல்லை தாண்டினால் நெஞ்சில் குண்டைப் பாய்ச்சுவதா.. ஏற்கவே முடியாது.. ஜெயக்குமார்
உயிர் விலை மதிக்க முடியாதது. எல்லை தாண்டி விட்டார்கள் என்பதற்காக மீனவர்களை சுட்டுக்கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தங்கச்சி மடத்தில் பேசிய தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்கு
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது என்று ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எல்லை தாண்டி விட்டார்கள் என்பதற்காக மீனவர்களை சுட்டுக்கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோ குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மணிகண்டன் ஆறுதல் கூறினர். பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
மீனவர் படுகொலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடையே பேசிய ஜெயகுமார், நடுக்கடலில் இலங்கைப் படையால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது என்றார்.

மீனவர் பிரச்சினை
மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து மீனவர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஜெயக்குமார், மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தும் என்றார்.

கச்சத்தீவை மீட்போம்
நாடாளுமனறத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழக மீனவர்களின் வேதனையை தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார். பல நூறு ஆண்டுகளாக கச்சதீவில் தமிழர்கள் மீன்பிடித்துக் கொண்டுதான் இருந்தனர். கச்சதீவை மீட்டே தீருவோம் என்றும் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.

மீனவரின் உணர்வு
தங்கச்சி மடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைப் பற்றி விளக்கினார். கடல் எல்லையை தாண்டும் போது படகுகள், வலைகளை சேதப்படுத்தக்கூடாது என்று பேசியதாகவும் கூறினார். மீனவர்களின் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

உயிரை பறிப்பதா?
மீனவர் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். உயிர் விலை மதிக்க முடியாது, எல்லை தாண்டியதற்காக துப்பாக்கியைக் கொண்டு உயிரைப்பறிப்பதா என்றார். சேதமடைந்த படகுகளுக்கு ரூ. 5லட்சம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இலங்கை வசமுள்ள 139 மீன்பிடி படகுகளை மீட்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
அமைச்சராக தான் இங்கு வரவில்லை என்றும் மீனவர்களின் உணர்வு தனக்கு நன்றாக புரிகிறது என்றும் கூறினார். தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications