ஊரை அடித்து ரூ.20 ஆயிரம் கோடி சொத்து சேர்த்த தினகரன் குடும்பத்தினர்- அமைச்சர் குற்றச்சாட்டு
தினகரன் குடும்பத்தினரிடம் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான சொத்து உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: தினகரன் குடும்பத்தினர் கொள்ளையடித்து ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
வடசென்னை தெற்கு மாவட்ட திரு.வி.க. நகர் பகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புளியந்தோப்பில் நடந்தது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார் அதில் கலந்து கொண்டார்.
அதில் பேசியதாவது: தினகரன் ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்வதை பற்றி பேசி வருகிறார். அவருக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். நான் 8 முறை சிறைக்கு சென்றுள்ளேன். கட்சிக்காகவும், நியாயத்துக்காகவும் போராடி நான் சிறை சென்றுள்ளேன்.

வித்தியாசம் இருக்கிறது
நான் மட்டுமல்ல பாலகங்கா உள்ளிட்டோரும் சிறை சென்றுள்ளனர். நாங்கள் சென்றது தியாகத்துக்காக. தினகரன் சென்றது திருடிவிட்டு சிறைக்கு சென்றார். திருடனுக்கும் தியாகிகளுக்கும் வித்தியாசமா இருக்கிறது.

சொத்து எவ்வளவு
அவர் திருடி விட்டு சிறை சென்றதால் அவர் தியாகி ஆகி விட முடியுமா. 1991- ம் ஆண்டுக்கு முன்பாக அந்த குடும்பத்தினரின் சொத்து எவ்வளவு? இன்று எவ்வளவு சொத்து இருக்கிறது.

ரூ.20 ஆயிரம் கோடி
கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த குடும்பத்தின் சொத்து இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தமிழ்நாட்டையே சூறையாடி இருப்பார்கள். கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்த பணத்தில் அதிமுகவை கைப்பற்றி விடலாம். ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று சொன்னால் அவர்கள் வாயில் மண்ணுதான்.

சசிகலா குடும்பத்தை ஏற்கவில்லை
எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டோம். இனி ஒன்றும் நடக்காது. பெண்கள் தினகரன் மீது கோபமாக இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களும் அந்த குடும்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications