ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனில் போனிலும் தகவல் தெரிவிக்கலாம்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் தகவல் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் தகவல் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரது மரணத்தில் மரணம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழு அண்மையில் விசாரணையை தொடங்கியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அது தொடர்பான அறிக்கையை நவம்பர் 22ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பலாம் என விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார்.
மேலும் தகவல் தெரிந்தவர்கள்ள தொலைபேசி வாயிலாகவும் தங்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதற்காக அறிவிக்கப்பட்டிருந்த 044 -2581 3599 என்ற தொலைபேசி எண் இன்று முதல் செயல்பாட்டிற்கு வநுதுள்ளது.
இதனை பயன்படுத்தி ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட உதவிக்காக வழக்கறிஞர் நிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications