For Daily Alerts
Just In
அதிமுக ஆண்டு விழா அன்றே ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினருக்கு 2வது லட்டு
சென்னை: அதிமுகவின் 43வது ஆண்டு விழா நாளிலேலேயே அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியிலுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி மக்களின் அமோக ஆதரவை பெற்றார்.
இந்நிலையில் கட்சி தொடங்கிய 43வது ஆண்டு தினம் இன்றாகும். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா இந்த விழாக்களுக்கு தலைமை தாங்கி வந்த நிலையில், அவர் சிறையிலுள்ளதால் சோகத்துடனேயே அதிமுகவினர் விழா எடுத்தனர்,.
ஆனால் மதியம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த செய்தி வந்ததும் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர். அதிமுக தொடக்க விழா காணும் இந்த நாளில் அம்மா விடுதலையாவது தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Comments
English summary
Party members is double celebration mood as Jayalalitha gets bail on the AIADMK founder day
Story first published: Friday, October 17, 2014, 13:20 [IST]