ஜெயலலிதா உடல் நிலை குறித்து இன்று விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்து முழுவதுமான விளக்கங்கள் எதுவும் மக்களுக்கு சரிவர தெரிவிக்கப்பட வில்லை.

இதனையடுத்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உண்மை விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், அவர் குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, முதல்வரின் உடல் நிலை குறித்த பிரச்சனை பொதுமக்களிடையே பேசும் பொருளாக மாறி இருப்பதால் அதுபற்றி மக்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் என்றும், மருத்துவமனை அளிக்கும் விளக்கத்தைக் காட்டிலும், தமிழக அரசு சார்பிலான விளக்கத்தை இன்று நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications