விசாரணையில் ஜெயலலிதா கைவிரல் ரேகை வைத்த விஷயமும் தெரியவரும்.. ஜெயக்குமார் பரபர

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கைவிரல் ரேகை வைத்த விஷயமும் விசாரணை கமிஷன் மூலம் தெரியவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெயலலிதா கைவிரல் ரேகை வைத்த விஷயமும் தெரியவரும்-வீடியோ

    சென்னை:ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கைவிரல் ரேகை வைத்த விஷயமும் விசாரணை கமிஷன் மூலம் தெரியவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இட்லி சாப்பிட்டார் என பொய் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் தெரிவித்தார். இதன் காரணமாக ஜெயலலிதா மரண விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    பொய் சொன்ன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்ற அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர்களும் விளக்கமளிக்க வேண்டும்

    அமைச்சர்களும் விளக்கமளிக்க வேண்டும்

    இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்று கூறிய அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

    கைவிரல் ரேகை வைத்த விஷயமும்

    கைவிரல் ரேகை வைத்த விஷயமும்

    இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா கைவிரல் ரேகை வைத்த விஷயமும் தெரியவரும் விசாரணை கமிஷன் மூலம் தெரியவரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை கமிஷனில் தண்டனை பெறுவார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

    யாரும் தப்ப முடியாது

    யாரும் தப்ப முடியாது

    தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார். இதில் ஒளிவு மறைவு கிடையாது என்றும் ஜெயக்குமார் கூறினார். அந்த கமிஷன் அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தகவல் சொன்னவர்களிடம் விசாரணை

    தகவல் சொன்னவர்களிடம் விசாரணை

    யார் யார் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் சொன்னார்களோ அவர்களிடம் கமிஷன் கண்டிப்பாக விசாரிக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார். விசாரணை அடிப்படையில் அறிக்கை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது

    வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது

    டி.டி.வி.தினகரனிடம் 5 சதவீதம் அளவுக்குத்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 95 சதவீதம் எங்களிடம் இருக்கிறார்கள். 5 சதவீதம் உள்ள அவருக்கு கட்சி சட்டதிட்ட விதிப்படி பொதுக்குழு கூட்ட உரிமை இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார். எந்த தகுதியும் இல்லாமல் பொதுக்குழு கூட்டுவேன் என்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+