ஜெ. நினைவிடத்தில் மீண்டும் அலங்காரம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் வருகை.. தொண்டர்கள் குவிகின்றனர்!
இணைப்பிற்குப் பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் செல்ல உள்ளனர். இதனால் ஜெ. நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம் இன்று செய்யப்பட்டுள்ளது. இணைப்பிற்குப் பின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அங்குச் செல்ல உள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தனித்தனியே நடைபெற்றன. இன்று இணைப்பு ஏற்பட்டு, புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்த பின்னர் இரு தரப்பு ஆதரவாளர்களும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தர உள்ளனர். இதனால் ஜெயலலிதா நினைவிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் காணப்படுகிறது.
முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் மெரினாவில் வர உள்ளதால் அங்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.