கொலைகாரனும் கூட்டாளியும்... ஜெ. சொன்ன குட்டிக்கதை
Subscribe to Oneindia Tamil
விருதாச்சலம்: மது விலக்கு பற்றி தகுதி வேண்டும். மது விலக்கை அகற்றி கடைகளை திறந்த கருணாநிதிக்கு அந்த தகுதியில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதியை தாக்கும் வகையில் குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.

ஒருவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏதோ காரணத்தால் அவர்களால் அந்த இடத்தை விட்டு ஓட முடியவில்லை. அப்போது கொலையானவரின் உறவினர்கள் நண்பர்கள் அந்த இடத்தில் கூடி கூக்குரலிட்டு அழுதனர்.
அப்போது அங்கிருந்த கொலையாளிகள், கொலையானவரின் நண்பர்களுடன் சேர்ந்து "ஐயோ நண்பா" என்று கூக்குரல் இட்டனர். அதேப்போல் தான் உள்ளது மதுவிலக்குக் குறித்து கருணாநிதி பேசி வருவது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications