தமிழகத்தின் இந்திரா காந்தி ஜெயலலிதா.. ஈவிகேஎஸ் இளங்கோவன் புகழாரம்
தமிழகத்தின் இந்திரா காந்தியாக திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் இந்திரா காந்தியா திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று கூறினால் அது மிகையாகாது என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் புகழ்ந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவு குறித்து இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து:
அரசியல் ரீதியாக முதல்வர் ஜெயலலிதாவுடன் நான் கருத்து வேறுபாடு கொண்டவன். என்றாலும் கூட அவர் மீது தனிப்படட முறையில் மரியாதை, பாசம் கொண்டிருந்தேன்.

எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். எதற்கும் அஞ்சாதவர். சுருக்கமாக சொன்னால் தமிழகத்தின் இந்திரா காந்தியாக விளங்கியவர் ஜெயலலிதா என்று சொன்னால் மிகையாகாது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நானும் அவரும் ஒரே பள்ளியில் படித்தவர். எனக்கு ஒரு வருடம் சீனியர் அவர். கொள்கை அளவில் என்னுடன் வேறுபட்டவர். இருப்பினும் வீரம் மிக்கவர். தன்னம்பிக்கையோடு திகழ்ந்தவர் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications