அதிமுக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்... தேதிகளை அறிவித்தார் ஜெ.!
சென்னை: அதிமுக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், 29ம் தேதி, சென்னை ஆர்.கே.நகர்; 30ம் தேதி, திருநெல்வேலி மற்றும் மதுரை; 31ம் தேதி, தஞ்சாவூர், திருச்சி; பிப்., 1ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார்; பிப்., 6ம் தேதி, வேலுார் மற்றும் விழுப்புரம்; பிப்., 7ம் தேதி, சேலம் மற்றும் கோவை ஆகிய இடங்களில் நடைபெறும்.
கூட்டத்தில், மகளிர் அணியினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள்; கிளை, வார்டு, வட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி மற்றும் மாவட்ட அளவில், தேர்தல் பணியாற்ற மகளிரை தேர்வு செய்தல், மகளிர் அணியின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் போன்றவை பற்றி விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.