குணமடைந்து விட்டார், அவரது விருப்பத்திற்கேற்ப வீடு திரும்புவார்.. ஜெ. குறித்து பிரதாப் ரெட்டி தகவல்
ஜெயலலிதா தாம் விரும்பும்போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ தலைவர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரும்பும்போது வீட்டுக்கு திருவார் என்று அப்பல்லோ மருத்துவமனையில் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் 50 நாட்களுக்கு மேலாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நலம் தேறி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக செய்தியாளர்களை சந்திக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்... அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரேதான் முடிவு செய்வார் என கூறியிருந்தார்.

அதிகபட்சம் 7 வாரங்கள்...
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரதாப் ரெட்டி, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருகிறது. அவர் முழுமையாக குணமடைய 6 முதல் 7 வாரங்களாகலாம்.

தீவிர சிகிச்சை பிரிவு ஏன்?
மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வழக்கமான உணவை உட்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

தேவைப்படும்போது செயற்கை சுவாசம்
ஜெயலலிதாவுக்கு அவ்வப்போதுதான் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தேவைப்படும்போது சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார். எங்கள் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவை நன்றாக கவனித்து வருகின்றனர்.

விரும்பும்போது...
முதல்வர் ஜெயலலிதா அவரது விருப்பத்திற்கேற்ப வீடு திரும்புவார். அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அப்பல்லோ ரெட்டி கூறினார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications