Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருத்தாச்சலம் நெரிசலில் 2 தொண்டர் பலி எதிரொலி.. பிரச்சார நேரத்தை மாற்றிய ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருத்தாச்சலம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து தனது பிரச்சார நேரத்தை மாற்றியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.

தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்த ஜெயலலிதா, அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, கடந்த 9, தேதி சென்னையில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, அடுத்ததாக 11ம் தேதி விருத்தாச்சலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Jayalalithaa Changes campaign timing

அன்றைய தினம் 3 மணிக்கே ஜெயலலிதா மேடையேறினார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 11 மணியளவிலேயே கூட்டத்தில் அமர வைக்கப்பட்ட மக்கள் வெயிலிலேயே சுமார் 4 மணி நேரங்களாக காத்துக் கிடந்தனர்.

இதில், வெப்பத் தாக்குதலுக்கு ஆளான சிலர் மயக்கமடைந்தனர். ஜெயலலிதாவின் உரைகு பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு மயங்கி விழுந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்தாண்டை விட இம்முறை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால், அரசு அதிகாரிகளே மாவட்ட வாரியாக, பொதுமக்கள் தேவையில்லாமல் பகல் நேரங்களில் வெளியே சுற்ற வேண்டாம் என எச்சரித்த நிலையில், இவ்வாறு மக்கள் வெயில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தவர்கள் இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கடும் வெயிலாக இருப்பதால் ஜெயலலிதா தனது பிரசார நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன.

ஆனபோதும். விருத்தாச்சலம் சம்பவத்தைத் தொடர்ந்தும் அவர், கடந்த சனிக்கிழமையன்று தர்மபுரியில் மாலை 3 மணியளவிலேயே பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் மக்கள் நலனில் ஜெயலலிதாவிற்கு அக்கறை இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் மாலை 6 மணியளவிலேயே நடைபெற்றது. இதனால், ஜெயலலிதாவைப் பார்க்கும், அவரது பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில் வெயியில் காய வேண்டிய அவஸ்தையிலிருந்து மக்கள் தப்பினர்.

இதேபோன்று இனி வரும் பிரச்சாரங்களும் மாலை நேரத்திலேயே நடைபெற்றால், வசதியாக இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+