விருத்தாச்சலம் நெரிசலில் 2 தொண்டர் பலி எதிரொலி.. பிரச்சார நேரத்தை மாற்றிய ஜெ.
சென்னை: விருத்தாச்சலம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து தனது பிரச்சார நேரத்தை மாற்றியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்த ஜெயலலிதா, அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கடந்த 9, தேதி சென்னையில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, அடுத்ததாக 11ம் தேதி விருத்தாச்சலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அன்றைய தினம் 3 மணிக்கே ஜெயலலிதா மேடையேறினார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 11 மணியளவிலேயே கூட்டத்தில் அமர வைக்கப்பட்ட மக்கள் வெயிலிலேயே சுமார் 4 மணி நேரங்களாக காத்துக் கிடந்தனர்.
இதில், வெப்பத் தாக்குதலுக்கு ஆளான சிலர் மயக்கமடைந்தனர். ஜெயலலிதாவின் உரைகு பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு மயங்கி விழுந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்தாண்டை விட இம்முறை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால், அரசு அதிகாரிகளே மாவட்ட வாரியாக, பொதுமக்கள் தேவையில்லாமல் பகல் நேரங்களில் வெளியே சுற்ற வேண்டாம் என எச்சரித்த நிலையில், இவ்வாறு மக்கள் வெயில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தவர்கள் இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கடும் வெயிலாக இருப்பதால் ஜெயலலிதா தனது பிரசார நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன.
ஆனபோதும். விருத்தாச்சலம் சம்பவத்தைத் தொடர்ந்தும் அவர், கடந்த சனிக்கிழமையன்று தர்மபுரியில் மாலை 3 மணியளவிலேயே பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் மக்கள் நலனில் ஜெயலலிதாவிற்கு அக்கறை இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் மாலை 6 மணியளவிலேயே நடைபெற்றது. இதனால், ஜெயலலிதாவைப் பார்க்கும், அவரது பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில் வெயியில் காய வேண்டிய அவஸ்தையிலிருந்து மக்கள் தப்பினர்.
இதேபோன்று இனி வரும் பிரச்சாரங்களும் மாலை நேரத்திலேயே நடைபெற்றால், வசதியாக இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications