மாணவர்கள் சாவுக்கு ஜெயலலிதா இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இமாச்சல பிரதேசத்தில் மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பியஸ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஹைதராபாத்தில் இருந்து சென்ற 24 இளம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரு்கு மிகுந்த வருத்தத்துடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த நம்பிக்கையுடனும், ஆற்றலும் நிறைந்த இளம் உயிர்கள் மிக கொடூரமாக பறித்து செல்லப்பட்ட செய்தியை கேட்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. இந்த துயரமான இழப்பை தாங்கிக்கொள்ளும் வலிமையையும், துணிவையும் அவர்கள் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications