மக்க கலங்குதம்மா... #Jayalalithaa

தலைவன் இல்லாத படைக்களம் இருக்கும் நிலைதான் இன்றைய அதிமுகவின் நிலையாக உள்ளது. ஜெயலலிதா மரணமடைந்த இந்த ஓராண்டில் எத்தனையோ காட்சிகளை தமிழகம் கண்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மக்களால் நான்! மக்களுக்காக நான்!- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. கண்ணீரும், கதறலுமாய் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அம்மா இல்லாத இந்த ஒரு வருஷம் தமிழ்நாடே ரொம்ப கஷ்டப்படுது. நாங்க எல்லாம் தடுமாறிட்டு இருக்கோம் என்று கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர் தொண்டர்கள்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த ஓராண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களே இதை உணர்த்துகிறது.

    மாறிய காட்சிகள்

    மாறிய காட்சிகள்

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவும் தமிழக அரசியல் களமும் இதற்கு முன்னர் பார்க்காத பல காட்சிகளை பார்த்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக தலைமை வழக்கம் போல் சசிகலாவின் கைகளுக்குச் சென்றது. அம்மா அம்மா... என்று முழங்கிய வாய்கள் சின்னம்மா என்று முழங்கின.

    பிளவும், இணைவும்

    பிளவும், இணைவும்

    நள்ளிரவில் ஓபிஎஸ் முதல்வரானார். எல்லாம் சில நாட்களே. கட்சி மட்டுமல்ல ஆட்சியும் தனது கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்று நினைத்த சசிகலா, முதல்வராக ஆசைப்பட்டார். தர்மயுத்தம் வெடித்தது. ஆனால் சசிகலா சிறைக்கு சென்றார். கட்சி பிளவுபட்டது. இரட்டை இலையும் முடக்கப்பட்டது. பிளவுபட்டவர்கள் ஒன்றாக இணைந்தனர்.

    சின்னமும் மீட்கப்பட்டது. ஒன்றாக இணைந்து நினைவுதினத்தை அனுசரித்து வருகின்றனர்.

    ராணுவக்கட்டுப்பாடு

    ராணுவக்கட்டுப்பாடு

    ஜெயலலிதா இல்லாத ஓராண்டு அரசியலில் அதிமுகவில் ராணுவ கட்டுப்பாடு காணாமல் போய்விட்டது. அதிமுக என்ற யானையை அடக்கும் அங்குசமாக இருந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பின்னர் தலைவன் இல்லாத படைக்களம் இருக்கும் நிலைதான் இன்றைய அதிமுகவின் நிலையாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஜெயலலிதாவின் உறுதி

    ஜெயலலிதாவின் உறுதி

    மக்களால் நான், மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா தான் செல்லும் இடங்களில் எல்லாம் முழங்குவார். இன்றைக்கு மக்கள் இருக்கிறார்கள். அவர்தான் மறைந்து விட்டார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீருடன் கலங்கி வருகிறார்கள் மக்கள். தங்கள் வீட்டில் ஒருவர் மரணமடைந்தால் எப்படி கலங்குவார்களோ அப்படி நினைத்து கலங்குகின்றனர்.

    கலங்கும் தலைவர்கள்

    கலங்கும் தலைவர்கள்

    தாயை இழந்த பிள்ளைகள் எப்படி தவிக்குமோ அப்படித்தான் உள்ளது அதிமுகவின் நிலையும், தமிழகத்தின் நிலையும். ஜெயலலிதா என்ற ஒருவரை நம்பித்தான் மக்கள் வாக்களித்தனர். இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து 8 மாதத்திற்குள் அவர் மரணமடைவார் என்பது யாராலும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. ஜெயலலிதாவின் ஆன்மா வழிநடத்துகிறது என்று கூறினாலும் அவர் இல்லாத தமிழகம் தள்ளாடித்தான் போயுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+