ஜெ., மரணம்: எடப்பாடி அறிவித்தபடி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் மனு

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க உடனடியாக நீதிபதியை நியமிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க உடனடியாக நீதிபதியை நியமிக்கக் கோரி அதிமுகவை சேர்ந்த குடவாசல் முருகானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் பற்றி நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று தர்மயுத்தம் நடத்தினார் முன்னால் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்.

Jayalalithaa death enquiry commission PIL file in High Court

பிளவுபட்டிருந்த ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்பதற்கு முன்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டு இத்தனை நாட்கள் கடந்த பின்னரும் எந்த ஆணையமும் அமைக்கவில்லை. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பேச்சாளர் குடவாசல் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் இரு அணிகள் இணைப்பின் போது விசாரணை கமிஷன் அமைப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

40 நாட்களுக்கு மேலாகியும் ஆணையம் அமைக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வரும் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

விசாரணை முடியும் வரை ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேச தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவளாராம். விசாரணையின் போது தனது தரப்பில் உள்ள பல முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+