அருப்புக்கோட்டையில் 14 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா இன்று பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தென் மாவட்டங்களில் போட்டியிடும் 14 அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ந்தேதி சென்னை தீவுத்திடலில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். புதன்கிழமை தருமபுரியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு 11 தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு திரட்டினார்.

jayalalithaa election campaign at aruppukottai

இந்நிலையில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார். இதற்காக அருப்புக்கோட்டை- தூத்துக்குடி சாலையில் உள்ள காந்தி நகரில் 6 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் அருப்புக்கோட்டைக்கு செல்கிறார்.

அங்கு விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகங்கை, பரமக்குடி (தனி), மானாமதுரை (தனி), முதுகுளத்தூர், ராமநாத புரம், கோவில்பட்டி, விளாத் திக்குளம் ஆகிய 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான அ.தி. மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஐ.ஜி.முருகன் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+