தேர்தல் விதி... வேட்புமனுத் தாக்கலின் போது அரசு காரை தவிர்த்த ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் விதிமுறைகளின் படி அரசு காரைத் தவிர்த்து வேறு காரில் சென்றார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

Jayalalithaa Files Nomination to Get Re-elected to the Tamil Nadu Assembly

இன்று தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அவரின் மாற்று வேட்பாளராக அதிமுகவின் அவைத் தலைவரான மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Jayalalithaa Files Nomination to Get Re-elected to the Tamil Nadu Assembly

முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தேசிய கொடி கட்டிய அரசு காரில் புறப்பட்ட ஜெயலலிதா, தலைமைச் செயலகம் வந்ததும் வேறு காருக்கு மாறினார். பின்னர் அந்தக் கார் மூலம் தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தேர்தல் விதிகளின் அடிப்படையில் அரசு காரைத் தவிர்ப்பதற்காக, ஜெயலலிதா இவ்வாறு கார் மாறியதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+