அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் மாற்றம்: வைகை செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு - ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராஜா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சிட்டிங் எம்.எல்.ஏ. வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்று அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்தார். இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முத்துராஜா மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக சிட்டிங் எம்.எல்.ஏ. வைகைச் செல்வன் மீண்டும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு நுழைந்தார். அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். அதிமுகவின் இளைஞர் பாசறை செயலாளர், அரசு கொறாடா என பல பதவி வகித்தவர் வைகைச் செல்வன்.
மதுரை மாவட்டம் சிலமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வந்தவர் வைகைச் செல்வன். ஆனால் அவரை கடந்த 2013ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் மேலே வரவே முடியவில்லை. இப்போது அவருக்கு மீண்டும் சீட் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications