தஞ்சை உள்பட 3 தொகுதி தேர்தல்.. அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெ.பெருவிரல் ரேகை
அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.
சென்னை: தஞ்சை, அரவக்குறிஞ்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றத்திலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.போஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனிடையே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும். இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாளர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும்.
அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் சேர்த்து வழங்கினால் தான் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படும்.
இந்த அத்தாட்சிக் கடிதம், form-B எனப்படும். இந்த படிவம் தேர்தல் நடத்தும் அந்தந்த தொகுதியின் அதிகாரிக்கு வேட்பாளரால் வழங்கப்பட வேண்டும். இதில், தொகுதியின் பெயர், தொகுதியின் எண், போட்டியிடும் வேட்பாளர் பெயர், வேட்பாளரின் தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு கட்சித் தலைவரின் கையெழுத்துடன் அனுப்பப்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் #ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார் pic.twitter.com/XU1okoKrmC
— News18 TamilNadu (@News18TamilNadu) October 28, 2016
இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் படிவத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்குப் பதிலாக அவருடைய பெருவிரல் ரேகை மட்டும் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications