கோடநாட்டிலிருந்து 23ம் தேதி சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: கோடநாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா வருகிற 23ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி கோடநாடு சென்றார். அங்கிருந்து அரசு மற்றும் கட்சி பணிகளை கவனித்து வரும் அவர் 17ம் தேதி கோத்தகிரியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வரும் 22ம் தேதி கோத்தகிரி அருகே ஈளடா பகுதி விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
இதையடுத்து 24ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்க இருப்பதால் 23ம் தேதியே சென்னை திரும்ப திட்டமிட்டி இருக்கிறார். அன்று கோடநாட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications