ஜெயலலிதா முதலாண்டு நினைவுதினம்... மெரீனாவில் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி
ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தொண்டர்கள் மெரீனாவில் குவிந்து வருகின்றனர்.
சென்னை: ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இந்திய அரசியலில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்த பெண் முதல்வர் வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர், ஜெயலலிதா.

எம்ஜிஆர் உருவாக்கிக் கொடுத்த அதிமுகவை 30 ஆண்டு காலம் ராணுவ கட்டுப்பாட்டோடு அவர் வழிநடத்தினார்.
6 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா, தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் கோலோச்சியவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும், சிகிச்சை பலனளிக்காமல், கடந்த ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.
ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களை மீளாத்துயரில் ஆழ்த்திய ஜெயலலிதாவின் மறைவு, தமிழக அரசியலையும் ஆட்டம் காணச் செய்தது.
ஜெயலலிதா மரணமடைந்த ஓராண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது.
வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர். அதிகாலை முதல் வரிசையாக நின்று தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றன.
சென்னை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திரண்டு வருமாறு அதிமுகவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 9 மணிக்கு அரசு சார்பில் பேரணி நடைபெற உள்ளது.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications