மூவர்ண கொடி போர்த்தி கண்ணுறங்கும் ஜெ., - கண்ணீர் கடலில் மக்கள்
ஜெயலலிதாவின் உடல் மீது அவருக்கு பிடித்தமான பச்சை நிற பட்டுப்புடவை உடுத்தப்பட்டுள்ளது. ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து , மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
#WATCH Mortal remains of #Jayalalithaa reaches Rajaji Hall in Chennai (Tamil Nadu), last tributes being paid. pic.twitter.com/Jn1UM7AlmZ
— ANI (@ANI_news) December 6, 2016
அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications