Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா கவலைக்கிடம்… செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்

ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற செய்தியைக் கேட்டு அதிமுக தொண்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தியை டிவியில் பார்த்த திண்டுக்கல் அதிமுக பிரமுகர் பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மேலும், இன்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. இந்தத் செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்த பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.

Jayalalithaa’s health: ADMK cadre died

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான இவர், குட்டுப்பட்டி அதிமுக கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்பது தெரிந்ததில் இருந்து கவலையுடன் காணப்பட்ட இவர், இன்று ஜெயலலிதாவிடன் உடல் கவலைக்கிடம் என்ற செய்தியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரால் ஜெயலலிதா குறித்த செய்தியை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவருக்கு நாச்சம்மாள் என்ற மனைவி உள்ளார். டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெரியசாமி உயிரிழந்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+