ஜெயலலிதா கவலைக்கிடம்… செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்
ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற செய்தியைக் கேட்டு அதிமுக தொண்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
திண்டுக்கல்: ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தியை டிவியில் பார்த்த திண்டுக்கல் அதிமுக பிரமுகர் பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மேலும், இன்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. இந்தத் செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்த பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான இவர், குட்டுப்பட்டி அதிமுக கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்பது தெரிந்ததில் இருந்து கவலையுடன் காணப்பட்ட இவர், இன்று ஜெயலலிதாவிடன் உடல் கவலைக்கிடம் என்ற செய்தியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரால் ஜெயலலிதா குறித்த செய்தியை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவருக்கு நாச்சம்மாள் என்ற மனைவி உள்ளார். டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெரியசாமி உயிரிழந்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!











Click it and Unblock the Notifications