ஜெ.வின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம்... பொன்னையன் சொல்கிறார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வரும் அவரை அதிமுக அமைச்சர்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன்.
அப்போது அவர், "முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்" என்றார்.
மேலும், 'முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது மட்டும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது தான் வழக்கு போடப்பட்டுள்ளது. வேண்டும் என்று பொய் வழக்கு போடுவது திமுக ஆட்சியில் தான். பிற மாநிலங்கள் பாராட்டும் வகையில் தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications