For Daily Alerts
Just In
பட்டாசு கிடங்கு உரிமம்: கட்டண உயர்வை வாபஸ் பெற பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: பட்டாசு கிடங்கு உரிமத்திற்கான கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.
பட்டாசு கிட்டங்கி உரிம கட்டணம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், போர்மேன் உரிம புதுப்பிப்பு கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் ஏப்ரல் 9ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருவதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் உரிம கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தேர்தல் விதி மீறல் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பில்லாத சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன பட்டாசுகள் கடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today urged the Centre to immediately withdraw the user fee notice (Explosives) and ensure the Customs authorities act effectively to prevent smuggling of Chinese fireworks to ensure a level playing field for the domestic industry.
Story first published: Saturday, April 12, 2014, 18:18 [IST]