ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஜெயலலிதா அதிரடி...

இது குறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கட்சியின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டது, கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது, கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டது போன்ற காரணங்களினால், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த திருச்சி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எம்.ராஜகோபால், அந்தநல்லூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.ரவிசங்கர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.
இதேபோல் அந்தநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எம்.முருகேசன், அந்தநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.கர்ணன், அந்தநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணை பொருளாளர் ஏ.சுப்பிரமணி, அந்தநல்லூர் ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் டி.ஆதிசிவன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி. இந்த தொகுதியில் கட்சி நிர்வாகிகள் 6 பேர் நீக்கப்பட்டுள்ளது திருச்சி அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications