அடுத்த வாரம் முதல்வராகப் பதவியேற்பார் ஜெயலலிதா... சொல்கிறார் சி.ஆர். சரஸ்வதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அடுத்த வாரம் முதல்வராகப் பதவியேற்பார் என்று அதிமுக பேச்சாளரும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
தீர்ப்பு வந்து இத்தனை நாட்களாகியும் இன்னும் வீட்டை விட்டுக் கூட வெளியே வராமல் இருந்து வருகிறார் ஜெயலலிதா. இந்த நிலையில், அடுத்த வாரம் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பார் என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சி.ஆர். சரஸ்வதி பேட்டி தருகையில், அம்மா தற்போது தீர்ப்பை முழுமையாக படித்து வருகிறார். முழுமையாக படித்து முடித்தவுடன் முதல்வராகப் பதவியேற்பார். அனேகமாக அடுத்த வாரமே அவர் பதவியேற்பார். நல்ல நேரத்திற்காகவும் அவர் காத்திருக்கிறார்.
திமுக உள்ளிட்ட கட்சிகள், தப்புக் கணக்கால்தான் ஜெயலலிதா விடுதலையாகி விட்டதாக கூறி வருகிறாரக்ள். இது தவறானது. தீர்ப்பை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வேறு மாதிரியாக வந்திருக்கும் என்று காத்திருந்தார்கள். குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுகவும் காத்திருந்தது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்டு விட்டது.
ஆனால் சொத்துக்களின் மதிப்பும், அவற்றின் அப்போதைய மதிப்பும், இப்போதைய மதிப்பும் நிச்சயம் வேறுபட்டுள்ளது என்று நீதிபதி தெளிவாகச் சொல்லியுள்ளார் தனது தீர்ப்பில். இப்போதைய மதிப்பை வைத்து அதை கணக்கிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹீரோயினாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரிந்தது. லட்சக்கணக்கில் சம்பாதித்தவர். சொத்துக் கணக்காகக கூறப்பட்ட ஒரு வீட்டை அவர் வாங்கவில்லை. மாறாக அவரது தாயார் வாங்கிய வீடு அது. வரியை முழுமையாக செலுத்தி வருபவர் ஜெயலலிதா என்றார் சரஸ்வதி.












Click it and Unblock the Notifications