Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.5 கோடி நிவாரண நிதி... குஜராத் முதல்வர் ஆனந்திபென்னுக்கு ஜெ. நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ5 கோடி அளித்த குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட தமிழகத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா ரூ5 கோடி அளிப்பதாக முதன் முதலாக அறிவித்தார். இருந்த போதும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அந்த நிதியை தமிழகம் பெற்றுக் கொண்டதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Jayalalithaa thanks Anandiben Patel for aid

இதன் பின்னர் பீகார், ஒடிஷா மாநில முதல்வர்கள் தலா ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தனர். உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ25 கோடி நிதி உதவி கொடுப்பதாக அறிவித்தார்.

இவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலும் தமிழகத்துக்கு ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா ஆனந்தி பென்னுக்கு நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது உதவிக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+