ஜெயலலிதா வழக்குகளை தகர்தெறிந்து மீண்டும் முதல்வர் ஆவார்: சரத்குமார்
நாகர்கோவில்: ஜெயலலிதா அந்த வழக்கை உடைத்தெறிந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். ஜெயலலிதா நிச்சயம் விடுதலை ஆவார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கு, தீர்ப்பு பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். இது நிரந்தர தீர்ப்பு அல்ல. உயர்நீதிமன்றம் இருக்கிறது. உச்சநீதிமன்றம் இருக்கிறது. நிச்சயமாக ஜெயலலிதா அந்த வழக்கை உடைத்தெறிந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். ஜெயலலிதா நிச்சயம் விடுதலை ஆவார். ஜாமீனில் அவர் விடுதலையானது சந்தோஷமாக உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இது இரட்டை தீபாவளி.
ஜெயலலிதாவை களத்தில் வெல்ல முடியாதவர்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லி 356-வது பிரிவை பயன்படுத்த பார்க்கிறார்கள். அது நிறைவேறாது. அ.தி.மு.க.வினர் தங்களது ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தினர். உணர்வுகளை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் மக்களாட்சி நடந்து வருகிறது. மீனவர் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கவர்னர் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய கருத்துக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பொம்மை ஆட்சி என்று கூறுவதை ஏற்கமுடியாது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக நிர்வாகம் செய்ய தெரிந்தவர். ஏற்கனவே நிர்வாகம் செய்துள்ளார்.
ஹூட் ஹூட் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தன்னிச்சையாகவே மேற்கொண்டுள்ளார். இவரை எப்படி அவ்வாறு சொல்ல முடியும்?
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்கிற யூகம், யூகமாகத்தான் இருக்கும். யார் முதல்வர் என்பதை அவர்களால் சொல்ல முடியாது. ஏற்கனவே ஒருவர் நான்தான் முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
எந்த வலுவான கூட்டணியும் அ.தி.மு.க. கூட்டணியுடன் போட்டி போட முடியாது. கடந்த லோக்பா தேர்தலில் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications