ஜெயலலிதா வெற்றி: ஆளுநர் ரோசய்யா, பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் ரோசய்யா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Jayalalithaa wins R K Nagar by-polls by over 1.5 lakh votes

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

இதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+