முருகா காப்பாத்துப்பா!!... நகையை திருடிவிட்டு சாமி கும்பிட்ட பலே திருடன் கைது!
புதுச்சேரி: கோவிலுக்குப் போய் நல்ல புத்தியைக் கொடுப்பா என்று சாமி கும்பிடுவார்கள். ஆனால் புதுச்சேரி அருகே சாமி கழுத்தில் இருந்த நகையை ஆட்டையைப் போட்ட திருடன் ஒருவன் போலீசிடம் இருந்து காப்பாத்துப்பா என்று கும்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த இந்த காட்சிகளை வைத்து திருடனை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் சனிக்கிழமையன்று காலை நடை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க சங்கிலிகள் காணாமல் போய் இருப்பதைப் பார்த்து பூசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அறங்காவலர் குழுவினர் லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் தங்க சங்கிலிகளைத் திருடிய நபரின் உருவம் பதிவானது தெரிய வந்தது.
காலை 7. 53 மணிக்கு கோவிலுக்குள் நெற்றியில் திருநீருடன் ஒரு நபர் உள்ளே நுழைகிறார். பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தபடி சுற்றும் முற்றும் பார்க்கும் அந்த நபர், கோவிலில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கருவறைக்குள் நுழைகிறார். ஒரு சில வினாடிகளில் திரும்பி வந்து மீண்டும் பயபக்தியுடன் சாமி கும்பிடுகிறார். முதலில் வெறும் கையுடன் இருந்த அந்த நபரின் கையில் கருவறைக்கு சென்று திரும்பிய பின்னர் மஞ்சள் நிறத்தில் சங்கிலி போன்ற பொருள் தெளிவாகத் தெரிகிறது.
இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இந்தக் காட்சிகளின் மூலம் அந்த நபர்தான் சாமி சிலைகளின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகளை திருடிச் சென்றான் என்பது உறுதிப் படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஏழுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.
நகையை திருடிவிட்டு சாமியை வேண்டினால் காப்பாற்றிவிடுவார் என்று நம்பினாரோ என்னவோ, சிசிடிவி காட்டிக்கொடுத்துவிடும் என்பதை கவனிக்காமல் இருந்துவிட்டார் அந்த பலே திருடன்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications