சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியர் பன்னீர்செல்வத்துக்கு இல்லை- சசிகலா ஆதரவு எம்எல்ஏ செம்மலை
சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியர் பன்னீர்செல்வத்துக்கு இல்லை என சசிகலா ஆதரவு எம்எல்ஏவான செம்மலை தெரிவித்துள்ளார்.
சென்னை: சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியர் பன்னீர்செல்வத்துக்கு இல்லை என சசிகலா ஆதரவு எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார்.எதிர்க்கட்சியினர் பன்னீர்செல்வத்தை கருவியாக பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏவான செம்மலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றவர் சசிகலா. சசிகலாவால் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியும்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் திடீரென தடம்புரண்டுள்ளார். எதிர்க்கட்சியினர் அவரை கருவியாக பயன்படுத்துகின்றனர்.
ஜெயலலிதா கூறியதாலேயே ஜுனியரான அவரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. அதனாலேயே அவர் சசிகலாவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
ஆளுநர் நிச்சயம் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பார் என நம்புகிறோம். இவ்வாறு சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏ செம்மலை கூறினார்.