'நான் ஏன் போக வேண்டும்' கேள்வி எழுப்பிய நீதிபதி கர்ணன்... உச்சநீதிமன்றத்தில் ஆஜர்
'நான் ஏன் போக வேண்டும்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கர்ணன் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்றம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி கர்ணன் ஆஜரானார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார்.
இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் ஒன்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினார்.

7 பேர் அமர்வு
அதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்றம் பதிவு செய்தது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரணை
இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்பதால் நேரில் ஆஜராக நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனாலும் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகவில்லை. மேலும் நான் ஆஜராக முடியாது என்றும் கூறி வந்தார்.

பிடிவாரண்ட்
இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக் கூடிய பிடி வாரண்ட்டை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் என்றும் கர்ணன் கூறினார்.

ஆஜர்
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் உச்சநீதிமன்றம் கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியது.

தப்பியது
நீதிபதி கர்ணன் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால் அவரை கைதுசெய்யும் அவசியம் இல்லாமல் போனது. இனியும் தொடர்ந்து உச்ச நீதிமன்ற அமர்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கர்ணன் செயல்படுவார் என்று வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications