தலைமறைவு நீதிபதி கர்ணன்... தீர்ப்பை எதிர்த்து சுப்ரீகோர்ட்டில் மேல்முறையீடு?
உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தா நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. நீதிபதி கர்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே சென்னை வந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்கி இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக மேற்கு வங்க போலீஸ் டி.ஜி.பி. சுரஜித்கர் புர்கயஷா தலைமையிலான 5 அதிகாரிகள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். பின்னர் மேற்கு வங்க டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர் கரன்சின்ஹாரவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்

தலைமறைவா?
இதனிடையே நேற்று அதிகாலையில் வாக்கிங் செல்வதாக வெளியே புறப்பட்டு சென்ற நீதிபதி கர்ணன் திடீரென தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் போலீசாரின் கவனத்தை திருப்புவதற்காக தன்னுடைய பாதுகாவலரை தொலைபேசியில் அழைத்து தான் காளஹஸ்தி செல்வதாக கூறினாராம் நீதிபதி கர்ணன்.

அலைந்த போலீஸ்
இதனால் சென்னை வந்த கொல்கத்தா போலீஸ் காளஹஸ்தி சென்றனர், அவர் அங்கு இல்லாததால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து நீதிபதி கர்ணனின் தொலைபேசி சிக்னலைக் கொண்டு அவரைத் தேடி ஆந்திர மாநிலம் தடா சென்றனர். ஆனால் அவர் அங்கும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய கொல்கத்தா போலீசார் சென்னையில் தங்கியுள்ளனர்.

கடலூரில் கண்காணிப்பு
நீதிபதி கர்ணன் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு செல்லலாம் என்று கருதப்படுவதால் தமிழக போலீசார் உதவியுடன் மேற்கு வங்க போலீசார் அவரது சொந்த ஊரிலும் கண்காணித்து வருகின்றனர். நீதிபதி கர்ணனை கைது செய்ய வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்கு வங்க போலீசார் திணறி வருகின்றனர்.

மேல்முறையீடு
இந்நிலையில் தன் மீதான கைது நடவடிக்கை தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் இன்று தாக்கலாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே நீதிபதி கர்ணன் தலைமைறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications