தமிழகத்தில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது – திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு
திருப்பூர்: தமிழகத்தில் தற்போது நிர்வாகம் சீர்கெட்டு நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாநகர, வடக்கு மாவட்ட திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், "தென் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சேது சமுத்திர திட்டத்தை அதிமுக தலைமையிலான தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது.
சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் கனவு திட்டம். திமுக தலைவர் கலைஞர் தொடங்கி வைத்த இந்த திட்டம் ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டம் வருவது மூலமாக தென்னகத்து மக்களுக்கு வருமானம் உயரும். தொழில் வளரும்.
புதிய புதிய தொழிற்சாலைகளை உருவாக்கலாம். போக்குவரத்து செலவு குறையும். எனவே அதற்கு மத்திய அரசு உடனடியாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்கை முரண்பாடு இருந்தாலும், காங்கிரஸ், அண்ணா, கலைஞர் ஆட்சி காலங்களில் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை அவர்கள் முடக்கி வைத்தது இல்லை. மாதம் ஒரு ரூபாய் வீதம் 60 மாதங்கள் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, 60 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது எப்படி என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நிர்வாகம் சீர்கெட்டு நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது" என்றார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications