அதிர்ச்சி தோல்வியெல்லாம் புதியது அல்ல.. எப்போதும் நடப்பதுதான்” – கி.வீரமணி 'ஆறுதல்' அறிக்கை!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிர்ச்சித் தோல்விகள் நமக்குப் புதிதல்ல... நமது தேர்தல் ஜனநாயகத்தில் எப்போதும் நடப்பதுதான், என்று கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழக் தலைவர் கி வீரமணி ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியை நமக்குத் தந்த இந்த தேர்தல் முடிவுகள் நமது தேர்தல் ஜனநாயகத்தில் புதியதல்ல, எப்போதும் நடப்பதுதான்.
இது மக்கள் தீர்ப்பு என்பதால் அதை மனம் தளராது ஏற்று, மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிப் பெற்ற அனைவருக்கும், கட்சியில் ஆட்சி தலைமையேற்போருக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கொள்கைகளில் மாறுபட்டாலும் கூட.
இதன் விளைவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக அமைந்தால், அதனை என்றும் வரவேற்போம்," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications