கமல்ஹாசன் திடீர் டெல்லி பயணம்.. ஏன், எதற்காக?
ராகுலிடம் கூட்டணி குறித்து பேசவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து பேசவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்கும்விதமாக கமல், அவ்வப்போது சில சிக்னல்களை காட்டி வந்தார். இதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசினார்.

இதன் பின்னர், நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கமல் கூறியிருந்தார். இதனால் பலமான கூட்டணி ஒன்று தயாராக போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் உருவாகி வந்தது.
இந்நிலையில் மீண்டும் டெல்லி செல்வதற்காக கமல் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்கள், இதற்கு முன்னால் கமல், ராகுலை சந்தித்தபோது என்ன பேசினார் என்பது குறித்த அனைத்து கேள்விகளையும் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல், ராகுல் காந்தியிடம் தான் கூட்டணி குறித்து எந்த பேச்சும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளாட்சி தேர்தலை நடத்த மக்கள் நீதி மய்யமும் முயற்சி செய்யும் என்று கூறிய கமல், உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் என்றுமே துணையாக இருக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications