இது தெரியாம எதிர்பார்த்துட்டோமே.. போன வருஷமே கட்சி பெயரில் பாதியை கமல் சொல்லிட்டாரே!
Recommended Video

மதுரை: கமல்ஹாசன் தனது புதிய கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார்.
திராவிடம் என்ற பெயரை ஒட்டி ஏதாவது ஒரு பெயரை கட்சிக்கு சூட்டுவார் என எதிர்பார்த்த பொது ஜன மக்களுக்கு இது வித்தியாசமான பெயர்தான். ஆனால், கட்சியின் பெயரை மக்களிடம் பதியவைக்க அவர் முன்கூட்டியே ஒரு முன்னெடுப்பை செய்திருந்தார்.

கமல்ஹாசனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பரில், சென்னை தி.நகரில் நற்பணி மன்றம் சார்பில் புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில், கமல் மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இது வெறும் ஆப் அல்ல ஒரு பொது அரங்கம் என்று கமல் அப்போது கூறினார். இந்தச் செயலியின் மூலம் தன்னைப் பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் சொல்லலாம் என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம், கட்சியின் பெயரில் ஒரு பகுதியை கமல் கடந்த வருடமே அறிவித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications