விழாவுக்கு நேரமாகிவிட்டது.. உங்கள் அன்புக்கு நன்றி பரமக்குடியில் காரில் இருந்தபடியே பேசிய கமல்!
ராமநாதபுரத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார்.
Recommended Video
பரமக்குடி: ராமநாதபுரத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார். விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் இருந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், கலாமின் குடும்பத்தாரிடம் ஆசி பெற்றார்.
பின்னர் மீனவர்களை சந்தித்த அவர் அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி அதிரடி காட்டி வருகிறார்.
உங்கள் வீட்டு விளக்கு
இந்நிலையில் ராமநாதபுரத்தில் திரண்டடிருந்த மக்களிடையே நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள் இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் அல்ல உங்கள் வீட்டு விளக்கு என்றார்.
அலைமோதிய கூட்டம்
அந்த விளக்கை அணையாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
மேடைக்கு வரவில்லை
இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்றார். அப்போது விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார்.
பரமக்குடியில் பேசவில்லை
மேலும் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்க மதுரை விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் அவர் பரமக்குடியில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அள்ளிய கூட்டம்
1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். கமலின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். பரமக்குடி கமல்ஹாசனின் சொந்த ஊர் என்பதால் அங்கும் கூட்டம் அள்ளியது.