கமல் அறிமுகப்படுத்திய 3 ஆப்கள் #kh #maiamwhistle
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச 3 ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
Recommended Video
சென்னை: மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசவும், தான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவும் 3 ஆப்களை உருவாக்கியுள்ளார் கமல்.
இன்று கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னை தி.நகரில் நற்பணி இயக்கம் சார்பில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் 3 ஆப்களை அறிமுகப்படுத்தினார். #kh, #theditheerpomvaa, #maiamwhistle, #vituouscycle ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இதில் #theditheerpomvaa இதில் தேடி சென்று பிரச்சினைகளை தீர்ப்பது.
#maiamwhistle என்ற ஹேஷ்டேக் தீயநவை ஏற்படும்போது கருவியாக இது செயல்படும். #vituouscycle இது வெளிப்படைத்தன்மைக்காக உருவாக்கப்பட்டது. ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த 'ஆப்' அவர்களுக்கு கடமையை நினைவூட்டும்.
மக்களுக்கும், அரசுக்கும் நடுவே உரையாடல் தொடரவும் உதவும். இப்போதே முழுமையாக சொன்னால் பிறர் காப்பியடிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆப் ஒரு தொலைதொடர்பு சாதனம் போன்றது. ஜனவரியில் 'ஆப்' முழு வீச்சில் தயாராகும் என நம்புகிறோம் என்றார் அவர்.