கிராமங்கள் முன்னேற வேண்டும்... தத்தெடுத்த கிராமத்தில் கமல் பேச்சு
Recommended Video

திருப்பூர்: கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது என்று கமல்ஹாசன் பேசினார்.
மக்களை சந்திப்பதற்காக கமல்ஹாசன் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்துக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லபாளையம் கிராமத்துக்கு சென்றார். செல்லும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட கமல், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

உணவு
அப்போது அவர் பேசுகையில் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறோம்.

தோண்டி எடுத்து கொண்டிருக்கின்றோம்.
கிராமங்கள் தான் நகரங்களுக்கு உணவு அளிப்பவர்கள் என தெரிவித்தார்.எல்லாம் செய்தது போல சிலர் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

முன்னேற்றம்
ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும், மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும். படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகரத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தைக் நோக்கி நகர வேண்டும் நல்லது எல்லாம் ஒன்று கூட ஆரம்பித்துவிட்டது.

8 கிராமங்களில் ஒன்று
அதுதான் நாம் ஒன்று சேர்ந்திருப்பது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சிறிய கிராமத்தில் ,பெரிய பணிகளைக் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு ,மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர்,
நாங்கள் தத்தெடுத்த 8 கிராமங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார்.

மதிய உணவு
வாக்களிப்பதற்காக கிராமங்களை தத்தெடுக்கவில்லை. இது எங்கள் கடமை. கிராம சபை கூட்டங்கள் புதைக்கப்பட்டுள்ளது. அதைக் தோண்டி எடுத்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து கிராம மக்களுடன் இணைந்து ஒன்றாக அமர்ந்து கமலஹாசன் மதிய உணவு சாப்பிட்டார்.












Click it and Unblock the Notifications