நான் கலைஞன்... அவர்தான் தலைவர்!- கருணாநிதியை கவுரவித்த கமல்!
கமல் ஹாஸன் பேச்சைக் கேட்டு, 'லைட்டா குழப்புறாரு' என சிலர் கமெண்ட் அடிப்பதுண்டு. ஆனால் கூர்ந்து கேட்டால், அதில் பல அர்த்தங்கள் இருக்கும். இதை அவர் முன்தயாரிப்பின்றி சரளமாகப் பேசுவார். எல்லாருக்கும் அது கைவராத கலை.
கருணாநிதி தலைமையில் சமீபத்தில் நடந்த வைரமுத்துவின் சிறுகதை வெளியீட்டு விழாவில் கமலின் பேச்சு அப்படித்தான் அமைந்தது.
இந்த விழாவுக்கு கமலின் ரசிகர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். அவர்கள் கமலைப் பார்த்ததும் விசில் அடித்து முழக்கமிட்டனர். சிலர் கோரஸாக ‘தலைவா' என்று குரல் எழுப்பினார்கள்.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கமல் மைக் பிடித்ததுமே கரவொலி...
‘‘நான் வரும்போது நீங்கள் அழைத்த ‘தலைவா' வார்த்தை (கருணாநிதியைக் காட்டி) அவருக்குத்தான் சொந்தம். நான் கலைஞன் மட்டுமே!" என்றார். கைதட்டல் அடங்க நெடுநேரம் ஆனது.
‘‘பாலகனாக நான் நடிக்க வந்தபோது, நடித்துக் காண்பிக்கச் சொன்னார்கள். அவரின் (கருணாநிதி) வசனத்தைச் சொல்லித்தான் நடிகன் ஆனேன். இன்று அவரோடு மேடையைப் பகிர்ந்துகொண்டு இருப்பது என்னுடைய பாக்கியம்.!
இதில் 40 சிறுகதைகள் இருப்பதாக வைரமுத்து சொன்னார். முன்னுரையைப் படித்தேன். அதுவே ஒரு சிறுகதைதான். இவை ஊரார் பேசும் வம்புக் கதைகள் அல்ல.... சில நேரங்களில் கோபப்படவும், கண்கலங்கவும், பொறாமைப்படவும் வைக்கின்றன. எனக்கே கதை எழுதவேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டன இந்தக் கதைகள். நானும் கவிதைகள் எழுதி இருக்கிறேன். அதை வைரமுத்துவிடம்தான் காட்டுவேன். நன்றாக இருக்கிறது என்று அவரும் சொல்வார். அவர் நல்ல கவிஞரா? நல்ல நடிகரா என்று தெரியவில்லை?"
-கைத்தட்டல் பறந்தது.












Click it and Unblock the Notifications