For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அநியாயத்தை கண்டு பொங்கி வெந்த சோறு இது... தொட்டாலே சுடும்- கமல்

அநியாயங்களைப் பார்த்து பொங்கி வெந்த சோறு இது. ஊழலில் திளைத்தவர்கள் தொட்டாலே சுடும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் நீதி மய்யம்.. கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

    மதுரை: கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பேசிய கமல்ஹாசன், இது அநியாயங்களைப் பார்த்து பொங்கி வெந்த சோறு என்றும் ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும் சுடும் என்று கூறியுள்ளார்.

    மதுரை ஒத்தக்கடையில் பிரம்மாண்ட மக்கள் வெள்ளத்திற்கு இடையை சரியாக 7.30 மணிக்கு இணைந்த கரங்களின் நடுவே நட்சத்திரத்துடன் கூடிய வெண்மை நிற கொடியை ஏற்றினார் கமல் ஹாசன்.

    Kamal tames his opponents

    சஷ்டி தினமான இன்று ஆறு கரங்கள் இணைந்த கொடியை ஏற்றி கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.

    இது உங்களுக்கான கட்சி, மக்களுக்கான கட்சி. நான் தலைவன்அல்ல ஒரு கருவி. மக்கள் கட்சியின் பெயர்
    மக்கள் நீதி மய்யம் என்று கூறினார். கட்சியை சுருக்கமாக 'எம்என்எம்' என்றும் அழைக்கலாம்.

    நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஓரு பருக்கை சோற்றை உங்களுக்கு உதாரணமாக்கியிருக்கிறோம். அநியாயங்களைப் பார்த்து பொங்கி வெந்த சோறு இது. இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. சோற்றுப்பருக்கையை தொட்டுப்பாருங்கள் சுடும் என்றார் கமல்.

    தமிழ் உள்ளங்கள் உலையாய் கொதித்த சோறு இது. பொங்கி வெந்த சோறு இது ஊழலில் திளைத்திருக்கும் உங்களது விரல்கள் சுடும் என்று கூறினார் கமல்ஹாசன். கமல் பேசிய பின்னர் பொதுக்கூட்டம் முறைப்படி தொடங்கியது.

    English summary
    Kamal Haasan has tamed his political opponents in his party launch meeting in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X