காரைக்குடி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று 15.07.2016 கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அழகப்பா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர். குரு மலேஷ் பிரபு அவர்கள் தலைமை ஏற்றார். தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் அழகப்பா பல்கலைக் கழக துணைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அருண் அவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி, கிராமக் கல்விக் குழுத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேசும்போது மாணவர்களிடம் படிப்பு, அறிவு, திறமை இந்த மூன்றும் இருந்தாலே வாழ்கையில் முன்னேற்றம் காண இயலும் என்று கூறினார். அவர் மேலும் தனியார் பள்ளிக்கு மேலாக அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அதற்கு உதாரணமாக செயல்படுகிறது என்றார்.

இப்பள்ளியின் வளர்ச்சி, கட்டிட அமைப்பு, பள்ளிக்கென்று இணையதளம் ஆகியவை பிரமிக்கத்தக்கவகையில் இருப்பதாகவும் கூறினார். அரசு பள்ளி மாணவர்கள் மிக உயர்ந்த பதிவிகளை வகிக்க முடியும். உயர் பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியில் படைத்தவர்கள் தான் என்றார்.

மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பேச்சு போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர் பிரசாந்த் காமராஜர் வேடமிட்டு கவிதை படித்தார். மாணவி பிருந்தா காமராஜரை பற்றி தமிழிலும், மாணவி ஜீவிதா ஆங்கிலத்திலும் பேசினார்கள். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி செய்திருந்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications