காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை – சண்டைக்கோழியால் விபரீதம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டுடோரியலில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பு முரளி நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் ஸ்ரீநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு டுடோரியல் மையத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீநாத், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு கண்ணகி நகர்ப் பகுதியில் சண்டைக் கோழி திருடியதாகக் கூறப்படுகிறது. உரியவர்கள் சண்டைக் கோழியை அவரிடம் இருந்து மீட்டு, போலீஸில் புகார் செய்யப் போவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஸ்ரீநாத் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் வட்ட போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.